ஈழமும் ஊடகமும்..

Tuesday, August 18, 2009


சினேகா, பத்மா மற்றும் ஈழத் தமிழர்.....

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் பெய்துவரும் மழையால், முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நம் உறவுகள் சொல்லவொன்னா துயருக்கு ஆளாகியுள்ளனர். மழைக்கு முன்னரே ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு வந்த அவர்கள் இப்போது அதுவும் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கழிப்பிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மனிதக் கழிவுகள் நீரில் மிதப்பதாகவும், சுகாதாரமற்ற நிலையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் கனமழை பெய்தால் நிலைமை ஐம்பது மடங்கு மோசமாகும் என்று கூறப்படுகிறது.

இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில், நம்மை தம் தாய்தமிழ் உறவுகள் என்று கூறிக்கொள்ளும் நம் சொந்தங்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும்? அதிர்ச்சியில் உறைந்து கிடப்பதை விடுத்து அவர்களுடைய மீள்குடியேற்றத்தை விரைவு படுத்த தமிழக, இந்திய அரசுகளை நிர்பந்திக்கவேண்டும்.

இந்நிலையில் நம்முடன் இணைந்து குரல் கொடுக்கவேண்டிய ஊடகங்களோ ஈழத் தமிழர் துயர் எதையும் வெளியிடாமல், சிங்கள நாய்களின் புளுகுகளை அரைப் பக்க அளவிற்கு வெளியிடுகின்றன. அப்படியே வெளியிட்டாலும், திரைப்படங்களின் முகப்பில் நாயகன், நாயகி பெயரையடுத்து மற்றும் பலர் என்று போடுவதைப்போல்தான் ஏனோ தானோ என்று வெளியிடுகின்றன. ஆனால் தமிழகத்தின் நெ.1.என்று தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக்கொள்ளும் மூன்று பத்திரிக்கைகள், ராஜபக்சே நம் தேசியத் தலைவரைப் பற்றி அவதூறாகப் பேசியதை கட்டம்கட்டி வெளியிட்டன.

தமிழனின் வேர்வையை காசாக்கி பிழைப்பு நடத்தும் ஈனப் பிறவிகள் தமிழினத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்கின்றன. நம் உறவுகள் அங்கே மழையில் நனைந்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் செய்தி நம் காதுகளை எட்டியபோது, சிநேகாவிற்கு ஆபாச குறுஞ்செய்தி வந்ததையும், நடிகை பத்மா விடுதலை ஆன செய்தியையும் தொடர்ந்து வெளியிட்டு ஊடக ......சாரம் செய்து மகிழ்ந்தன.

முன்பின் அறியாத வெளிநாட்டவர்கூட நமது சொந்தங்களுக்காக குரல்கொடுத்த வேளையில், தமிழக ஊடகங்கள் ஹர்பஜன் சிங்கும், தோனியும் ஒரு கோடி ரூபாய்க்கு கார் வாங்கிய செய்தியை முன்னிலைப்படுத்தின. தமிழக ஊடகங்கள், தமிழ் மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டவை. சேவை செய்யாவிட்டாலும் துரோகமாவது செய்யாமல் இருக்கட்டும்.

0 comments:

Post a Comment

 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs