முதல்பாகம்

Sunday, August 9, 2009

திருவள்ளுவர் சிலை - பண்டமாற்று
ஒரு வழியாக பண்டமாற்று வியாபாரத்தின் முதல் பாகம் இனிதே நிறைவேறியிருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவள்ளுவருக்கு விடிவு வந்திருக்கிறது என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சிதான். ஆனால் இது ஒரு வகையில் பண்டமாற்று வியாபாரம் என்றுதான் சொல்லவேண்டும். பெங்களூரு தமிழ் சங்கம் 18 ஆண்டுகளுக்கு முன் தெய்வப்புலவருக்கு சிலை வைத்தது. அப்போதைய பெங்களூரு தொகுதி காங்.சட்டமன்ற உறுப்பினர் ஜார்ஜ் தலைமையில் சிலை திறப்பு விழாவும் நடத்தப்பட்டது.

சில கன்னட அமைப்புகள் நீதிமன்றத்தை அணுகி சிலை வைக்க தடை பெற்றதை அடுத்து 18 ஆண்டுகள் சாக்குத் துணியால் கட்டிவைக்கப்பட்டது. இப்பொழுது அதே நீதிமன்றம், திறப்பு விழாவிற்கு தடை கேட்ட வழக்கின் மீது தீர்ப்பளிக்கும்போது "இந்த வழக்கால் இரு மாநில மக்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். தமிழன், கன்னடன், மலையாளி என்று நாம் வேறுபட்டுக்கொள்ளாமல் இந்தியனாக வாழவேண்டும். சிலை திறப்பு மூலம் இரு மாநிலத்திலும் சகோதரத்துவம் வளரும். இது போன்ற வழக்குகள் நீதி மன்றத்திற்கு வரக்கூடாது" என்று கூறியுள்ளது. அதே நீதிமன்றம்தான் முன்பு சிலை திறப்பதற்கு தடையும் விதித்தது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நீதிமன்றத் தீர்ப்பும் மாறும் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்து, பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு, அதன் மூலம் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தவர் எடியூரப்பா. இப்பொழுது பெங்களூரு நகர் மன்றத் தேர்தலில் தனது கட்சி வெல்ல வேண்டும் என்பதற்காக அதே எடியூரப்பா சகோதரத்துவம் பேசுகிறார். தன்னுடைய 18 ஆண்டுகால சபதத்தை சகோதரர் எடியூரப்பா நிறைவேற்றிவிட்டார் என்று நமது முதல்வரும் புளகாங்கிதம் அடைகிறார். ஆனால் நாங்கள் முதலில் திருவள்ளுவருக்கு சிலை திறக்கிறோம். அதற்கு மாற்றாக நீங்கள் சர்வக்ன்ஜர் சிலையை திறக்கவேண்டும் என்ற பண்டமாற்று ஒப்பத்தந்தின் அடிப்படையில் அல்லவா திறப்பு விழா நடந்திருக்கிறது? இதில் மகிழ்வதற்கு என்ன இருக்கிறது?

"உலகில் உள்ள எல்லாம் எல்லாருக்கும் பொதுவானது" என்பதைத்தான் கன்னடக் கவிஞர் தனது நூலில் வலியுறுத்தி உள்ளாராம். ஆனால் கன்னடர்கள் ஆற்றுக்கு மூடியும், காற்றுக்கு வேலியும் போட நினைக்கிறார்கள். இனியாவது அந்தக் கவிஞரின் கூற்றை ஏற்று நடப்பார்கள் என்று நம்புவோம்.

2 comments:

saran said...

"அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப நீதிமன்றத் தீர்ப்பும் மாறும் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்."

it's true

Jimmicarter said...

Better we can take it in a positive way....You people in blogs have a common mentality of criticizing everything.....considering u flock of people as Mr.Clean...


Dont throw comments on all happenings...try to grow up gentlemen.

Post a Comment

 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs