தே.பா.சட்டம்...

Friday, August 14, 2009

தே.பா.சட்டம் = தேவையில்லாமல் பாயும் சட்டம்...

கோவையில் ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த குட்டி மணி இன்று மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழக மக்களுக்கு இதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏனெனில் இதற்கு முன்பும் வைகோ, சீமான், கொளத்தூர் மணி போன்றோர் தமிழக அரசால் தே.பா. சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர். பின்னர், அவர்களை "தே.பா.சட்டத்தில் கைது செய்தது செல்லாது" எனக்கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக அவர்கள் மீது தே.பா.சட்டம் பாய்ந்தது. "தடை செய்யப்பட இயக்கங்களை ஆதரித்து பேசுவது குற்றமல்ல" என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இது தினமும் செய்தித்தாள் படிக்கும் என் போன்ற சாமான்யர்களுக்கே தெரிந்திருக்கும்போது மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக செயல்படக் காரணம் என்ன? இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான கைது நடவடிக்கைகளால் எவ்வளவு அரசுப்பணம், காவல்துறையினரின் பணிகள், நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன? கைது செய்யப்படுபவர்கள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாகிறார்கள்? இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? கண்டிப்பாக மாநில அரசுதான் பொறுபேற்க வேண்டும். இனிமேலாவது இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs