இரட்டை வேடம்....

Saturday, August 8, 2009

கே.பி. கைது...கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

ஈழத்தில் போர் என்ற பெயரில் தினமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது சர்வதேச சமூகம் மெத்தனமாகவே இருந்தது. அதனால் துணிவுபெற்ற இலங்கை அரசு இனப்படுகொலையையும், மனித உரிமைமீரலையும் வெளிப்படையாகவே நிகழ்த்தியது. ஒருவழியாக போர் முடிந்தபிறகும் அங்கு மனித உரிமை மீறல்கள் குறையவில்லை.

ஆனால் இதை தட்டிக் கேட்கவேண்டிய சாவதேச சமூகமோ புணரமைப்பு, மீள்கட்டுமானம் என்ற பெயரில் இலங்கைக்கு மேலும் மேலும் நிதி உதவிகளை வாரிவழங்கி வருகின்றன.

இந்தியா சுமார் அய்யாயிரம் கோடிவரை வழங்கியது. போர்க்குற்றம், மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டிற்கு உள்ளான இலங்கைக்கு நிதிஉதவி அளிக்கக்கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்த்த போதும், சர்வதேச நாணய நிதியம் 2.5 டாலர் கடன் வழங்கியுள்ளது. சமீபத்தில் சிறிலங்காவின் மிதிவெடி அகற்றும் பணிகளுக்கு பிரிட்டன் அரசும் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இவற்றில் பெரும்பகுதி சிறிலங்காவின் ராணுவ வளர்ச்சிக்குத்தான் செலவிடப்படும் என்பது நமக்குத் தெரியாததல்ல.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல நாடுகள் பேசி வந்தாலும் அவற்றின் செயல்களில் நேர்மையில்லை. ஐ.நா. பாதுகாப்பு சபையிலும், சர்வதேச மனித உரிமை ஆணையத்திலும், பண்ணாட்டு நாணய நிதியத்திலும் இலங்கை இனவெறி அரசுக்கு எதிரான தீர்மானங்கள் அனைத்தும் தோற்கடிக்கப் பட்டதிலிருந்தே இந்த உண்மையை உணர்ந்துகொள்ளலாம்.

இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்ட விதமும் அதை உறுதி செய்கிறது. செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா அரசு வட்டாரங்கள் நேற்று கொழும்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளன. இதேவேளை பத்மநாதன் சிங்கப்பூரில் வைத்தே கைது செய்யப்பட்டதாகவும் தாய்லாந்தில் அல்ல என்றும் தாய்லாந்தின் சிறப்பு போலீஸ் பிரிவின் தலைவர் தீரா தேஜ் ரொட்போங் கூறியுள்ளார். ஆனால் சர்வதேச விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் விரோதமாக மலேசியாவில் செல்வராசா பத்மநாதனை இலங்கை அரசு கைது செய்து இலங்கைக்குத் தனி விமானத்தில் கடத்திப் போய் அவரைச் சித்திரவதை, கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

கே.பி எங்கு கைது செய்யப்பட்டார் என்பதில் இத்தனை முரண்பாடான தகவல் வெளியாக காரணம் என்ன? இலங்கையின் ஆளுமை சர்வதேச அளவில் நீள்கிறதா? அல்லது அதன் அண்டை நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, ஈழத் தமிழருக்கு எதிராக தீவிரமாக செயல்படுகின்றனவா? தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போரைக் கைவிட்டு, ஜனநாயக வழியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக அறிவித்தவர் கே.பி. முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்கவும், அவர்களை மீள் குடியேற்றம் செய்யவும் உதவுமாறு தொடர்ந்து சர்வதேச சமூகத்தை வற்புறுத்தி வந்தார். இத்தகைய ஜனநாயக நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் கே.பி யை இத்தனை மர்மமான முறையில் கடத்தி அடைத்து வைத்துள்ள நிலையில் எந்த நாடாவது, அல்லது அமைப்பாவது இதுவரை அதற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?


இலங்கைக்கு போரின் போதும், போருக்கு பின்னரும் பல நாடுகளும் உதவி வந்துள்ளன.. ஆனால் அவையே ஈழத்தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல் பற்றியும், அவர்களின் பாதுகாப்பு, மீள் குடியேற்றம் பற்றியும் பேசி, இரட்டை வேடம் போடுகின்றன.

1 comments:

Unknown said...

வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

Tamil10.com

Post a Comment

 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs