பொய்களின் நாடு

Tuesday, August 11, 2009

மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கே....

விடுதலைப் புலிகளை முற்றிலும் அளித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிக்கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு பேடியாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இப்பொழுது, அறவழியில் போராட முன்வந்திருக்கும் விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களையும் கைது செய்யவோ அல்லது கொலை செய்யவோ முயற்சிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டார். மீதமுள்ள சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் மற்றும் இளையதம்பி ஆகியோரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் புலிகள் இயக்கத்தை சேர்ந்த மிச்சங்கள் எங்கிருந்தாலும், அவர்களையும் பிடித்து அழிப்போம் என்கிறது இலங்கை அரசு.

ஏற்கனவே நீண்டகாலம் அறவழியில் போராடி, இலங்கை அரசின் தொடர் அடக்குமுறைகளுக்கும், அராஜகத்திற்கும் நிறைய உயிர்களை பலிகொடுத்த பிறகுதான், வேறு வழியின்றி தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த ஆயுதப் போராட்டமும் பன்னாட்டு உதவியோடு முறியடிக்கப்பட்டது.

இப்பொழுது புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் அறவழி அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சூழலில், இலங்கையின் இதுபோன்ற குறுக்குவழி அரசியல் அடக்குமுறைகள் தமிழர்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை சிதைத்து அவர்களை மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கே இழுத்துச்செல்லும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் பத்மநாதன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தினர் மீண்டும் ஒன்று சேர்ந்து தலைதூக்கும் வாய்ப்பு அடியோடு தகர்க்கப்பட்டுவிட்டது எனவும் , அவர் கைது செய்யப்பட்டதன் மூலம் புலிகள் இயக்கம் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டது எனவும் கோதபாய ராஜபக்சே கூறியுள்ளார். அது அவன் காணும் பகல் கனவு. தனி ஒரு நபரை கைது செய்வதன் மூலம் அழிந்து விடக்கூடியதா புலிகள் இயக்கம்? இலங்கையில் கடைசித் தமிழனின் உயிர் இருக்கும் வரை, இயக்கம் உயிரோடுதான் இருக்கும்.

அவனது அண்ணன் அண்டப்புளுகன் மகிந்த ராஜபக்சே "இலங்கைக்கும் அப்பாற்பட்டு தனி ஈழம் அமைக்க பிரபாகரன் கனவு கண்டார். அவரது இயக்கத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பார்த்தால் அவை இலங்கை ராணுவத்தை மட்டும் எதிர்த்து போரிட வாங்கப்பட்டதாக தெரியவில்லை. பெரும் போருக்காக வாங்கப்பட்டவை" என்று கூறியுள்ளான்.

அட அறிவிலியே! அவர்களிடம் அவ்வளவு ஆயுதம் இருந்திருந்தால் இப்போது நீ பேசிக்கொண்டிருக்க முடியுமா? புலிகளின் விடுதலைப் போரை, நாடு பிடிக்கும் ஆசையால் நடந்ததாக காட்டி, தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தும் முயற்சி இது. இலங்கையின் அரசியல் பொய்களின் மீதும், அடக்குமுறைகளின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.






0 comments:

Post a Comment

 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs